Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது: மேலும் ஒரு வழக்கு!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:32 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்பது கூட தேர்தல் ஆணையத்திற்கு பெரிய வேலையாக இருக்காது. ஆனால் இந்த தேர்தல் குறித்து பதிவு செய்யப்படும் வழக்குகளை சந்திப்பது தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும் என கருதப்படுகிறது
 
உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமென என்று திமுக தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சிக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது என்பதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொருத்தே தற்போது நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்குமா? அல்லது முடங்குமா? என்பது தெரிய வரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments