Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரருக்கு ஒருமாத விடுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (15:28 IST)
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவரது சகோதரர் மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது
 
இந்த நிலையில் 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரியும், இடைக்காலமாக அவருக்கு 3 மாத விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்
 
இந்த நிலையில் ஒரு மாதம் விடுப்பு வழங்க அரசுத்தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments