Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க உத்தரவு: நீதிமன்றம் செல்ல ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் அறிவிப்பு..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:42 IST)
ஆம்னி பேருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்றும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதி இல்லை என்றும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

ஆனால் கோயம்பேட்டிலிருந்து தான் பேருந்துகளை இயக்குவதாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடனே திடீரென கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ]

இந்த நிலையில் நேற்று கோயம்பேட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு  ஆம்னி பேருந்துகள் அங்கிருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

மேலும் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு நல்ல முடிவு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதிமன்றம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

இந்த கொசு கடிக்காது.. உளவு பார்க்கும்.. சீனாவின் அதிர்ச்சியான கண்டுபிடிப்பு..!

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments