Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான்?

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:37 IST)
வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவில் தற்போது 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேர்களுக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார் 
 
பரிசோதனை முடிவு வந்த பின்னரே 43 பேரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மகாராஷ்டிரா டெல்லி உள்பட பல மாநிலங்களில் 50க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 43 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments