Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுக்கிப் போன பழங்களில் ஜூஸ் ....கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Webdunia
சனி, 27 மே 2023 (16:02 IST)
கோயம்பேடு சந்தையில் எலிகள் கடித்த மற்றும் அழுக்கிப் போன பழங்களை வாங்கி வந்து குறைத்து விலைக்கு விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில்  இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று  சோதனை நடத்தினர். அங்கு, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் அழுப்போன துர்நாற்றம் வீசியுள்ளது.

அந்தக் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கோயம்பேடு சந்தையில் இருந்து எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி வந்து ஜூஸ் போட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர், அதில், கடை உரிய  ஆவணமின்றி செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து  அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 5  ஆயிரம் அபராதம் விதித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments