Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பு குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:53 IST)
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும்  குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் 4 வாரத்திற்குள் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பை அளித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலா தண்டனை காலம் 4  ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகள் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது.

 
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ’அம்மாவின் புனிதம் துரோகிகளால் களங்கப்படுத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ’ஜெயலலிதாவுக்காக அனைத்து துன்பத்தையும் சசிகலா ஏற்றுக்கொண்டார்’என்றும் குறிப்பிட்டுள்ளனர். 
 
இதில் உள்ள பதிவுகளுக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கமென்ட் போட்டு வருகிறார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments