Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைபெறுகிறார் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
வியாழன், 21 மே 2015 (12:58 IST)
தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விடைபெறுகிறார்.
 
தமிழக முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மே 23 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
 

 
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
 
இக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
 
பின்பு, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் வழங்குவார் என்றும், இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் தெரிய வருகின்றது.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்க வசதியாக, தற்போது, தமிழக முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments