Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது வழக்குப்பதிவு.. குழந்தை பலியானதால் நடவடிக்கை..!

Mahendran
புதன், 1 மே 2024 (12:54 IST)
சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில் அந்த குழந்தை பலியானதாகவும் இதன் அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த செவிலியர் ஒருவர் திருமணமாகாமல் கர்ப்பமான நிலையில் குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த நிலையில் எதிர்பாராத வகையில் அந்த குழந்தை பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க காவல்துறையினர் விரைந்து வந்து செவிலியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் செவிலியர் கர்ப்பத்திற்கு காரணமான அவருடைய காதலரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டாரா அல்லது தனக்குத்தானே பிரசவம் பார்ப்பதற்கு வேறு ஏதேனும் காரணமா? உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments