Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது’ - சுவாதியின் தந்தை உருக்கம்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (18:31 IST)
சுவாதி கொலையுண்ட இடத்தில் கிடந்த அவருடைய அடையாள பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது என்று படுகொலையான சுவாதியின் தந்தை கூறியுள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று [ஜூன் 24ஆம் தேதி] காலை சுவாதி வாலிபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’எனது மகள் கொலை தொடர்பாக உறுதிபடுத்தப்படாத பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. யாராலும் அவளது உயிரை திருப்பி தர முடியாது.
 
ஆனால் அவளுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தகவல்களை ஏன் பரப்ப வேண்டும். கொலை தொடர்பான அனைத்து விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.
 
சுவாதி கொலையுண்ட இடத்தில் அவருடைய அடையாள அட்டை மற்றும் டை ஆகியவை கிடந்துள்ளன. அதை பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments