ஒருவர் கூட விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.. வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்..!

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (14:05 IST)
தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு  தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் அறிவித்த நிலையில் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்றும் தேமுதிக அலுவலகமே காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது என்றும் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் அவர் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் இன்று காலை முதல் நாளை காலை வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் தேமுதிக அலுவலகத்தில் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்றும் அக்கட்சியின் அலுவலகம் காலியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியானவுடன் விருப்பமனு கேட்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments