இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (11:15 IST)
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இனி வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வரும் நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில், "கோடை காலம் இன்றுடன் முடிகிறது. இன்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு தனித்துவமான ஆண்டாக, வெப்ப அலை இல்லாத ஆண்டாக இருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.
 
"இந்த ஆண்டு மே மாதத்தில், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ்-ஐ ஒரு நாளும் தாண்டவில்லை. கடந்த 25 ஆண்டுகளில், இது போல் மூன்று முறை நடந்துள்ள நிலையில், இது நான்காவது முறை," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அரபிக்கடல் மற்றும் அங்காள விரைகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அது புயலாகவும் மாறலாம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"இனிமேல் கோடை காலம் இல்லை. அவ்வப்போது மழை பெய்யும். கோடை இல்லாத மே மாதத்தை நன்றாக அனுபவியுங்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments