Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இருந்த வரை.. துரைமுருகன் உருக்கம்...

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (11:36 IST)
சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இருந்த கட்டுப்பாடு தற்போது இல்லை என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் வேலூர் மாவட்டம் ராணிப்பேடையில் திமுக சார்பாக ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதில் யார் யார் எல்லாம் சிக்குவார்கள் எனத் தெரியாது என கூறினார்.
 
அதன் பின் பேசிய துரைமுருகன் “கருணாநிதி  நலமுடன் இருக்கிறார். நாள்தோறும் செய்திதாள்களை வாசிக்க சொல்லி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார். சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பதால் அதிமுக உறுப்பினர்கள் அவர் அவர் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். அவர் இருந்த போது இருந்த கட்டுப்பாடு இப்போது இல்லை” என கூறினார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments