Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்போர்ட்டில் இனி பேட்டி கொடுக்க மாட்டேன்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (16:55 IST)
விமான நிலையத்தில் இனி பேட்டி அளிக்கமாட்டேன் என்றும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி அழைப்பேன் என்றும் இனிமேல் அனைத்தையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்றும் அங்கு அவர் அமைச்சராக போகிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லியில் பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலையை விமான நிலையத்தில் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்த போது இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் அனைத்தும் இனிமேல் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி என்றும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
விமானத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கும்போதே சில விஷயங்கள் நடந்து வருகிறது என்றும் அது தெரியாமல் நான் பேட்டி அளித்தால் பிரச்சனையாகிவிடும் என்றும் அதனால் இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி கிடையாது என்றும் பேட்டி எப்போது என்பதை முன்கூட்டியே செய்தியாளர்களுக்கு அறிவித்து விடுவோம், அந்த பேட்டியும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments