Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை: வேளாண் அமைச்சர்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (12:41 IST)
விவசாயிகள் தங்கள் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் பேசினார். அப்போது நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கான அறிவிப்பு வெளியாகிறது என்றும் விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் ஆழ்துளைக்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் படி நிலத்தடி நீரை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறையை புதுச்சேரியில் செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
விவசாயிகள் ஒரு ஆள்துறை கிணறுக்கும் மற்றொரு ஆழ்துளை கிணறுக்கும் இடையே இடைவெளி தேவை இல்லை என்றும் அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் ஆழ்துளைக்கிணறு அமைத்தவுடன் கட்டணம் இல்லாமல் அரசிடம் பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்று வைத்து மின் இணைப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments