Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சல் இல்லை - மக்கள் பீதி அடையத் தேவையில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (00:46 IST)
தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், அதையும் கட்டுப்படுத்தி உள்ளோம் என்று மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

 
திருச்சியில், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு மையத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பரவியுள்ளது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். டெங்கு காய்ச்சல் என மக்கள் பீதி அடையத் தேவையில்லை.
 
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள  பகுதிகளில் 24 மணி நேர சிறப்பு முகாம் நடத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகம் முழுக்க, இந்த மாத இறுதிக்குள் சுமார் 7,300 சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பித்த 40 ஆயிரம் பேரில் 38 ஆயிரம் பேர் தேர்வெழுதினர், முடிவில் 7,300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். 
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments