Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுகவில் போட்டியிட ஆளே இல்லை: ஆர்.பி.உதயகுமார்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (21:15 IST)
தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை என்பது மட்டுமின்றி மக்களவை தேர்தலில் அமமுகவில் போட்டியிட ஆளே இல்லாமல் உள்ளதாகவும், அமமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை டி.டி.வி. தேடிக்கொண்டிருப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தேர்தலுக்குமுன் அமமுகவினர் அதிமுகவில் இணைந்தால் தங்களின் செல்வாக்கு மிச்சமாகும் என்பதே உண்மையான நிலை ஆகும் என்றும் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்க்க அமமுகவினர் இருக்கின்றார்களா? என்ற கேள்வியையும் அமைச்சர் முன்னிறுத்தியுள்ளார்.
 
கட்சிக்கும் சின்னத்திற்கும் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் அமமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விரும்பவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் இளைஞர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் முறியடித்துள்ளதாகவும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளித்த டிடிவி தினகரன், தேர்தல் முடிந்தபின்னர் யார் தேடப்படுபவர்கள் என்பது தெரியவரும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments