ராம்குமார் தற்கொலை குறித்து சிறைத்துறை அளித்த ஷாக்

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (17:15 IST)
ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக ஆர்டிஐ மூலக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறைத்துரை பதில் அளிக்க மறுத்துள்ளது. 


 

 
தமிழகத்தையே உலுக்கிய சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா ஆர்டிஐ மூலம் கேள்விகள் கேட்டு இருந்தார். அதில், தற்க்கொலை செய்துக்கொண்ட கைதிகளின் விவரம், மின்சாரம் தாக்கி இறந்த கைதிகளின் விவரம், சென்னை புழல் சிரையில் ராம்குமார் தற்கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. 
 
இதற்கு சென்னை புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே பதில் அளித்துள்ளது. ராம்குமார் தொடர்பான கேள்விகளுக்கு சிறைத்துறை பதில் அளிக்கவில்லை. இதனால் வழக்கறிஞர் பிரம்மா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments