Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: சிக்குகிறார் திருச்சி தொழிலதிபர்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (06:33 IST)
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு புரோக்கர் சுகேஷ் மூலம் ரூ.60 கோடி கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் தினகரனிடம் தற்போது டெல்லி போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.




இந்த விசாரணையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஹவாலா பணம் நரேஷ் என்பவர் மூலம் கைமாறப்பட்டதாகவும், இந்த கைமாற்றலில் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் திருச்சி தொழிலதிபர் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்

தினகரன் வழக்கில் ஏற்கனவே ஒரு எம்பி மற்றும் தினகரனின் வலது கை போன்று செயல்பட்ட ஒருவர் குறி வைக்கப்பட்டு அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த லிஸ்ட்டில் திருச்சி தொழிலதிபரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments