Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-தூத்துகுடி 10 வழிச்சாலை: மத்திய அரசு முடிவு

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (13:24 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தெரிந்ததே

இந்த நிலையில் மத்திய அரசு சென்னையில் இருந்து தூத்துகுடி வரை 10 வழிச்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.  : சென்னை - தூத்துக்குடி வரையிலான இந்த 10 வழிச்சாலை சுமார் ரூ13,200 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழியாகவும் அதன் பின் திருச்சியில் இருந்து தூத்துகுடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாலையால் சென்னை - தூத்துக்குடி வரையிலான தூரம் 100 கி.மீ. வரை குறையும் என்றும் பயண நேரமும் சுமார் 2 மணி நேரம் குறையும் என்றும், சென்னைக்கும் தூத்துகுடிக்கும் இடையிலான வர்த்தகங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments