Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: மாநில கல்விக் கொள்கை அறிக்கை

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (07:14 IST)
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என மாநில கல்வி கொள்கையில் நீதிபதி முருகேசன் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு தமிழ்நாடு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வி தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட சில வழிகாட்டுதலை தெரிவித்துள்ளது.

அதில் முக்கியமாக 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த கூடாது என்றும், ஆனால் அதே நேரத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சேருவதற்கு பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் போதாது என்றும், பிளஸ் ஒன் மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கம் போல் நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளது போல மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் போது படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே வகுப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments