Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையை கடந்த நாடா புயல்: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

கரையை கடந்த நாடா புயல்: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:54 IST)
வங்கக் கடலில் உருவான நாடா புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 
 
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரைக்காலுக்கு 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது புயலாக மாறி இதற்கு நாடா என பெயரிடப்பட்டது. இதனையடுத்து வலுவிழந்த நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை கடலூர் காரைக்கால் இடையே கரையை கடந்தது.
 
இந்நிலையில் காரைக்காலுக்கு 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
கடலூரில் 54 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் அடுத்த 12 மணி நேர்த்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments