Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.. ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு.. கண்காணிக்கும் பணி தீவிரம்..!

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (12:39 IST)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரித்து அவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 
 
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
நெல்லை உள்பட மூன்று மாவட்டங்களில் 400 ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்கும் பணியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு சிப்டுகளாக போலீசார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ரவுடிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
ரவுடிகளை கண்காணித்து அவர்கள் ஏதேனும் விபரீத செயல் செய்ய முயன்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ரவுடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து முழுமையாக ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறை களம் இறங்கி உள்ளது. இதுவரை 1750 ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments