Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கு - திமுக எம்எல்ஏ விடுதலை

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (14:09 IST)
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் இருந்து பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ மைதீன்கான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
 
நெல்லை, பாளையங்கோட்டை திமுக  எம்எல்ஏவாக இருப்பவர் டி.பி.எம்.மைதீன்கான். திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இவர், சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
 
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், திமுக எம்எல்ஏ மைதீன்கான் மீதான குற்றச்சாட்டு, காவல்துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments