Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை காணவில்லை.. மகன் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

Mahendran
சனி, 4 மே 2024 (12:24 IST)
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் என்பவரை காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, 
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் என்பவர் கடந்த இரண்டாம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றதாகவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் 
ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கடந்த மாதம் ஜெயக்குமார் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் அந்த புகாரின் பேரில் உவரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் 
 
இந்த நிலையில் திடீரென அவரை காணவில்லை என்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள  நிலையில்  ஜெயக்குமார் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments