Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 நாட்களில் நீட்! பதட்டத்தில் கிணற்றில் குதித்த மாணவர்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (12:44 IST)
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மன உளைச்சலால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்.

நீட் தேர்வுக்காக பல மாதங்களாக தயாராகி வந்த அவர் சில தினங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதிகமான மன அழுத்தம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக நீட் தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments