Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சத்தை நெருங்கும் கைது நடவடிக்கைகள்! – கொரோனாவுக்கு அஞ்சாத தமிழகம்!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (12:55 IST)
தமிழகத்தில் ஊரடங்கை மீறி சாலைகளில் திரிவதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை பின்பற்றி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதையும் மீறி மக்கள் அடிக்கடி சாலைகளில் திரிந்து வருவதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 90,918 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 82,572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments