Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:28 IST)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் நேற்று இரவு கொரோனாவுக்கு பலியான செய்தி அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருசில விஐபிகள் பலியாகி உள்ள நிலையில் அமைச்சர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் கொரோனாவால் பலியான அமைச்சர் துரைக்கண்ணு உடல் இன்று அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும்  மேலும் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவரின் மறைவு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக வேளாண் அமைச்சர் பாபநாசம் திரு.துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் அதிமுகவினர்- குடும்பத்தார் - நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கொரோனா இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. அனைவரும் எச்சரிக்கையோடு இருப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments