Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையே வழக்கு: நாராயணசாமி!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (07:02 IST)
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் புதுவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ’மோடி அரசு புதுவை வளர்ச்சி நிதியாக 15,000 கோடி கொடுத்ததாகவும் அந்த பணத்தின் ஒரு பகுதியை முதல்வர் நாராயணசாமி எடுத்துக்கொண்டு மீதியை சோனியா காந்தி குடும்பத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார் 
 
இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய நாராயணசாமி, ‘அமித்ஷா அபாண்டமாக பொய் கூறி உள்ளார் என்றும் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபிக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்
 
சோனியாகாந்தி குடும்பத்திற்கு 15,000 கோடி நிதியை நாராயணசாமி கொடுத்ததாக கூறியுள்ள அமித்ஷாவின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments