Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் தமிழிசை போட்டியிட்டால்? நாராயணசாமி எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:43 IST)
புதுச்சேரியில் தமிழிசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோல்வி அடைய தீவிர முயற்சி செய்வோம் என காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் புதுவை தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதுவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புதுவை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம் என காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வரை டம்மி ஆக்கிவிட்டு அவர் விளம்பரம் தேடிக்கொள்ள பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் என்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வேலையை அவர் செய்து கொண்டிருப்பதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் புதுவையில் தமிழிசை போட்டியிடுவதை அவரது கூட்டணி கட்சியே விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments