Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (12:29 IST)
உதகையில் 3 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும் என்று திமுக பொருளாளளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
நமக்கு நாமே பயணத்தின் இரண்டாவது கட்டத்தை மு.க.ஸ்டாலினின் நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.
 
இந்த பணத்தின்போது, கூடலூர் பகுதியில் ஸ்டாலின் பேசுகையில், "கூடலூர் பகுதியில் உள்ள விரிவு 17 இல் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு திமுக ஆட்சி காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டது. 
 
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிவு 17 இல் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்." என்று கூறினார்.
 
மேலும், "உதகை ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும், உதகையில் 3ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் உடனடியாக முடிவு எடுக்கப்படும்."  என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments