Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2015 (13:01 IST)
வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இதில் செந்தில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார். தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்திலுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று கூறினார்.
 
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி நசீர் அகமது, செந்திலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments