Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் சிறையில் முருகன், நளினி ஆகியோரின் உண்ணாவிரதம் வாபஸ்!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (22:06 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வரும் நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி முருகன், நளினி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

முருகன் கடந்த 12 நாட்களாகவும், நளினி 7 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். சிறைத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை நளினி, முருகன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை தேர்தல் அறிவிப்புக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக கவர்னருக்கு இதுகுறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments