Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் கழுத்து அறுத்து கொலை: பெரம்பலூரில் பயங்கரம்

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (18:46 IST)
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் 35 முதல் 40 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக, வயலூர் கிராம பொதுமக்கள் குன்னம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனர்.
 
அதைத்தொடர்ந்து, குன்னம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்தரா, மங்கலமேடு துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.  
 
இதுகுறித்து வயலூர் கிராம நிர்வாக அலுவலர் (பொ) ஜெயா அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..! 7 பச்சிளம் குழந்தைகள் பலி..!!

10 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன்.. மதுரையில் பயங்கர சம்பவம்..!

பர்னிச்சருக்குள் கோடி கோடியாய் பணம்.. தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டில் அதிர்ச்சி..!

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Show comments