Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (12:52 IST)
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை, ராஜஸ்தானில் தவறுதலாக சுட்டுக்கொன்ற, சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், பெரியபாண்டியனை சுட்டது 'சக ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால்தான் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக தெரிவித்தார். இருந்தபோதிலும் பெரியபாண்டியனின் மனைவி, முனிசேகர் எனது கணவரின் நெருங்கிய நண்பர், அவர் தனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.
இந்நிலையில் பெரியபாண்டியனின் 16-வது நாள் காரியத்திற்கு சென்ற முனிசேகர், அவரது மனைவியின் காலில் விழுந்து நடந்தவற்றைக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். கொள்ளையனை சுடும் போது தவறுதலாக, பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழக்க நேரிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments