Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா...??

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (12:07 IST)
போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர். 

 
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக வெளியான புகாரின் பேரில் சமீபத்தில் அவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
 
இந்நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை ரூ.2.51 கோடியாக காட்டப்பட்ட நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியில் இருந்தபோது 55% அதிகமான சொத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனிடையே போக்குவரத்துத் துறையில் டெண்டர்பெற்ற நிறுவனங்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை அண்ணாநகரில் உள்ள ரவிக்குமார் என்பவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே விஜயபாஸ்கர் டெண்டர் ஊழலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments