Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (16:02 IST)
நெல்லையில் மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து அருகே பாலாமடை என்ற பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்ததாக தெரிகிறது 
 
மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 
 
நர்சிங் படித்து வந்த அருணா, அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் செய்ததாகவும் திருமணத்திற்கு அவரது தாய் ஏற்பாடு செய்த நேரத்தில் காதல் விவகாரம் தாய்க்கு தெரியவந்ததை அடுத்து அவர் ஆத்திரத்தில் மகளை கொலை செய்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை கொன்ற தாயிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments