Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் படிப்பிற்கு பணம் கட்ட முடியாத தாய் தற்கொலை கொண்ட கொடூரம்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (14:55 IST)
மகன் படிப்பிற்கு பணம் கட்ட முடியாததால் தாய் ஒருவர் தற்கொலை கொண்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
 

 
தேனி மாவட்டம், மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ஜக்கம்மாள் (45). தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் குடியிருந்த ஜக்கம்மாள், கணவர் இறந்த நிலையில் வேலை தேடி தங்கம்மாள்புரத்தில் குடியிருந்து வந்தார்.
 
மூத்த மகன் திருமணம் முடிந்து ஓடைப்பட்டியில் குடியிருந்து வந்தார். தனது இரண்டாவது மகன் கோபாலகிருஷ்ணனை கூலி வேலை பார்த்து படிக்க வைத்தார். கோபாலகிருஷ்ணன் பிளஸ்-2 படித்த நிலையில் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம் தெரிவித்தார். இதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தேவைப்பட்டது.
 
அருகில் உள்ளவர்களிடம் கடன் கேட்டுப்பார்த்தார். யாரும் தராத நிலையில் மனமுடைந்த ஜக்கம்மாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை தேனி க.விலக்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அங்கு சிகிச்சை பலனின்றி ஜக்கம்மாள் உயிரிழந்தார். இது தொடர்பாக மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments