Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் தாய் மற்றும் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலி

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:18 IST)
கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவி மற்றும் குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(35).இவரது மனைவி ஜான்சி(28). இவர்களுக்கு பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் கணேசமூர்த்தி, ஜான்சி மற்றும் மகள் ஹரினி ஆகியோர் உறவினரின் காதணி விழவிற்கு சென்று இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதில் ஜான்சி மற்றும் ஹரினி ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பேருந்தின் சக்கரம் ஏறி தாய் மற்றும் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக் உயிரிழந்தனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments