கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (16:23 IST)
கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த  உடையார் என்பவர் தனது வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவிரட்டும் லிக்யூட் இயந்திரத்தை பயன்படுத்தினார் 
 
 இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென  கொசு விரட்டும் லிக்யூட் இயந்திரத்தில் தீப்பிடித்து புகையானது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தபோது தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மூன்று சிறுமிகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments