Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி..

Arun Prasath
சனி, 21 டிசம்பர் 2019 (09:53 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 2,31,000 பேருக்கும் அதிகமானோர் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த 27 மாவட்டங்களில் 91,975 பதவியிடங்களுக்கு 3,02,994பேர் மனு தாக்கல் செய்தனர். பின்பு அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

48,891 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments