Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்: இன்னும் எத்தனை நாளைக்கோ?

Webdunia
வியாழன், 16 மே 2019 (21:25 IST)
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வெயில் நெருப்பாக கொதித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பெரும் சிரமத்தில் உள்ளனர். 
 
ஓருசில நகரங்களில் கோடை மழை பெய்து வந்தாலும் பகலில் வெயில் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டியும் ஒருசில நகரங்களில் 100 டிகிரிக்கு அருகிலும் உள்ளது. 
 
வேலூரில் 106 டிகிரியும், மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய நகரங்களில் 105 டிகிரியும், நெல்லையில் 104 டிகிரியும், சேலத்தில் 100 டிகிரியும் இன்று வெயில் அடித்தது. அதேபோல் தருமபுரியில் 99 டிகிரியும், சென்னை கடலூர், புதுவை ஆகிய பகுதிகளில் 97 டிகிரியும், கோவை, தூத்துக்குடியில் 95 டிகிரியும் வெயில் அடித்தது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 72 டிகிரி வெயில் அடித்தது. 
 
இம்மாத இறுதி வரை வெப்பம் அதிகம் இருக்கும் என்றும், ஜூன் முதல் வாரத்திற்கு பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments