பிரதமர் மோடி என்ன பீடா விற்பவரா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:22 IST)
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் அறிவுரையின்பேரில் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நல்ல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனை கையில் எடுத்து கொண்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், அதிமுக, பாஜகவின் பிடியில் இருப்பதாகவும் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழக அரசுக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவது தவறு அல்ல. அவர் இந்த நாட்டின் பிரதமர். தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல' என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments