Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனு தாக்கல் செய்ய டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (22:14 IST)
டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டூவீலரை தள்ளி கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்கள் நீதி மய்யம் சார்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுபவர் முகமது ஹசீப். இவர் பெட்ரோல் உயர்வை கண்டித்து தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் இதனை கண்டிக்கும் வகையில் தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்ததாகவும் இதே ரீதியில் பெட்ரோல் நிலை உயர்ந்து கொண்டே சென்றால் யாரும் டூவீலரை ஓட்ட முடியாது என்றும் தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் தான் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் கூறியுள்ளார், இதனால் சில மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments