Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரும்பாடுபட்டு அமைத்த ஆட்சி.. அவப்பெயர் உண்டாக்க வேணாம்!? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (16:42 IST)
சமீப காலமாக திமுக பிரமுகர்கள் பேசுவது சர்ச்சையாகி உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாக திமுக பிரமுகர்கள் பொதுவெளியில் பேசும் தகவல்கள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வாக்குவாதங்கள் எழும் நிலையில் திமுகவினர் பலர் அதில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ALSO READ: அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “எக்காரணம் கொண்டும் சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கை கடைபிடிக்க வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.

அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால் மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட நெடிய பேச்சில் ஒரு துணை மட்டும் எடுத்து திரித்து புழுதியை கிளப்பி அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

Edited by: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments