Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (09:33 IST)
இன்று சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாட்டு மக்களால் விமரிசியாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் “இந்த ஆண்டில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் இது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு அரசு சார்பில் விழா எடுக்க திட்டம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுதந்திர தின விழாவில் முதல்வர்கள் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்த சுதந்திர தின விழாவில் முதல்வராக தேசிய கொடியை ஏற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு என் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிட்டன் தேர்தலில் சாதனை படைத்த தமிழ் பெண்..! குவியும் பாராட்டு..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்? மறுபரிசீலனை செய்க: சென்னை உயர்நீதிமன்றம்..!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments