வருமான வரி அதிகாரிகளே கூட சீட் கிடைக்கும்னு சொன்னாங்க! – ஐடி ரெய்டு குறித்து மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:56 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது குறித்து இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று உதயநிதிக்கு ஆதரவாக சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசும்போது “என் மகள் வீட்டிற்கு வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள், உணவு சாப்பிட்டார்கள். சோதனைக்கு பின் 25 சீட் அதிகமாக கிடைக்கும் என கூறிவிட்டு சென்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments