Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (22:57 IST)
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சி சமீபத்தில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஆளும் அதிமுக அரசை கண்டித்து தமிழகத்தில் 120 இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியுள்ள அவர், அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில். கண்ட ன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

அரசு விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அப்பட்டமாக அரசியல் பேசுகிறார், அமைச்சர்கள் முதல், முதலமைச்சர் வரை அனைவர் மீதும் ஊழல் புகார் உள்ளது.

காற்றாலை ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு வழக்கு போட கெடு விதித்தும் அமைச்சர் தங்கமணி, தயங்குவது ஏன்?

எனவே, அதிமுக ஆட்சி குறித்து, மக்களிடம் விளக்க   தமிழகம் முழுவதும்120 இடங்களில், கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் செல்வோம் -  மக்களுடன் செல்வோம்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments