Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்...குளத்தை காணோம்-குளத்தை காணோம் கண்டிபிடித்து தாங்க...

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (22:30 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செல்கல்பட்டு அருகே திமுக மாநாடு நடத்துவதற்காக மூடப்பட்ட 2 குளங்களை அதிகாரிகள் மீட்டனர்.

 

 
சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள ஆப்பூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலிலின் நமக்கு நாமே பயணத்தின் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதற்காக, தனியாருக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலத்தில் பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில், மேடையும் மைதானமும் அமைத்து வருகின்றனர். இதற்காக 350 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், அரசுக்கு சொந்தமான 2 குளங்களையும் திமுகவினர் அரசு அனுமதி பெறாமல் சமப்படுத்தியுள்ளனர்.
 
இது குறித்து கிராம கிராம மக்கள் கோட்டாட்சியர் பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, குளத்தை திமுகவினர் மண்போட்டு மூடியுள்ளது தெரியவந்தது.
   
இதனையடுத்து, காவல்துறை உதவியுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தைத் தூர்வாரி அதிகாரிகள் மீட்டனர். மேலும், அந்தக் குளத்தின் அருகே, இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று பெயர்ப்பலகையும் வைத்தனர்.
 
இந்த தகவல் அறிந்து அந்த இடத்தில் திமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது. 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments