Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் பணராஜா மனைவி சுதா. பணராஜா பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் சுதா இன்று வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு, ஊரில் உள்ள தோட்டத்திற்கு விவசாயம் செய்ய சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தை அறிந்து சேடபட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் முன் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments