Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தர பரிசீலனை! – கூட்டணிக்காகவா? மாநாட்டிற்காகவா?

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (13:04 IST)
பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அதிமுக அமைச்சர் கூறியிருப்பது கூட்டணியை காப்பாற்றும் முயற்சியா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து வரும் புத்தாண்டில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பாமகவின் கோரிக்கை குறித்து தற்போது பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “வன்னியர் சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இதுதொடர்பாக அரசு முடிவெடுக்கும்” என கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை தொடர்ந்து தேர்தலில் கூட்டணியை நீட்டிக்க இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டுள்ளதா அல்லது கொரோனா காலத்தில் பெரும் மாநாடு நடத்தப்படுவதன் பாதிப்புகளை தவிர்க்க முன்கூட்டியே பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments